< Back
பெங்களூரு
பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூரு

பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

மங்களூரு அருகே பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கரியா கிராமம் படுபவி பகுதியை சேர்ந்தவர் விக்சித் (வயது17). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். விக்சித் புத்தூரில் உள்ள பி.யூ. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், விக்சித் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் விக்சித்திற்கு உடல் நிலை சரியாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்சித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புத்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் விக்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்