< Back
பெங்களூரு
ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல்:  தலைமறைவான 2 பேர் கைது
பெங்களூரு

ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல்: தலைமறைவான 2 பேர் கைது

தினத்தந்தி
|
17 Aug 2022 4:18 PM GMT

கார் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் ஹம்பன்கட்டா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தா. இவருக்கு சொந்தமான காரை சுதீர்பிரபு, அனீப் ஆகிய இருவரும் வாடகைக்கு எடுத்தனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்து விட்டு கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந் தேதி டிரைவரை தாக்கி காரை திருடிக்கொண்டு மாயமாகினர். இதுபற்றி புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதீர்பிரபு, அனீப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுதீர்பிரபு, அனீப் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் மங்களூரு மாநகர போலீசார் கைது செய்தனர். பர்கி பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்