< Back
தேசிய செய்திகள்
உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை - ஆந்திராவில் இன்று திறப்பு

Image Courtesy : PTI

தேசிய செய்திகள்

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை - ஆந்திராவில் இன்று திறப்பு

தினத்தந்தி
|
18 Jan 2024 12:10 AM GMT

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று திறந்து வைக்க உள்ளார்.

மேலும் செய்திகள்