< Back
தேசிய செய்திகள்
பல்லாரியில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை
தேசிய செய்திகள்

பல்லாரியில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
28 Oct 2022 6:45 PM GMT

பல்லாரியில் மனைவியை கொன்று தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

பல்லாரி:

பல்லாரி மாவட்டம் சண்டூர் தாலுகா சோரனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 33). தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ரேகா நடத்தையில் குமாரசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் இந்த விவகாரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த குமாரசாமி, வீட்டில் இருந்த ஆயுதத்தை எடுத்து ரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில், ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் பயந்துபோன குமாரசாமி, வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சோரனூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொன்றுவிட்டு குமாரசாமி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்