< Back
தேசிய செய்திகள்
கணவன் உயிரிழப்பு காதலனை 2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்...!
தேசிய செய்திகள்

கணவன் உயிரிழப்பு காதலனை 2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்...!

தினத்தந்தி
|
29 April 2023 11:28 AM GMT

கணவன் 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் காதலனை 2-வது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை உறவினர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் விர்க்வாரி கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 34). இவருக்கு திருமணமாகி 7 வயதில் மகள் உள்ளார்.

இதனிடையே, சுனிதாவின் கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இதனை தொடர்ந்து தனது குழந்தையுடன் தனியே வாழ்ந்துவந்த சுனிதாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியுள்ளது.

கணவன் உயிரிழந்த நிலையில் சுனிதா தனது காதலனை 2வது திருமணம் செய்ய எண்ணியுள்ளார். இதற்கு சுனிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி சுனிதா தனது காதலனுடன் வசித்துவந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை சுனிதாவின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் வீட்டில் இருந்த சுனிதாவையும் அவரது காதலனையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இருவரையும் வீட்டிற்கு வெளியே இழுத்துவந்த குடும்பத்தினர் அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து இருவரையும் கடுமையாக தாக்கின ர்.

சுனிதாவின் குழந்தை கண் முன்னே அவரை கடுமையாக தாக்கினர். பின்னர், சுனிதாவின் காதலனையும் அவர்கள் தாக்கியுள்ளனர். 3 மணி நேரமாக இருவரையும் கடுமையாக தாக்கி அவர்களை சாக்கடைக்குள் தள்ளி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கிராமத்தினர் தலையிட்டு சுனிதாவையும் அவரது காதலனையும் மீட்டனர்.

2வது திருமணம் செய்ய பெண்ணையும், அவரது காதலனையும் மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தினர் கடுமையாக தாக்கிய நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுனிதா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்