< Back
தேசிய செய்திகள்
வரதட்சணை கொடுமை: மருமகளை 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம்
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை: மருமகளை 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூரம்

தினத்தந்தி
|
24 Aug 2024 10:30 PM GMT

வரதட்சணை தராததால் மருமகளை 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மும்பாரா பகுதியை சேர்ந்தவர் ஷபீர் முக்தர் ஷேக். இவருக்கு திருமணமாகி மனைவி (வயது 40) உள்ளார்.

இதனிடையே, ஷபீர் முக்தரின் தாயார், தந்தை மற்றும் குடும்பத்தினர் தங்கள் மருமகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி மருமகளுக்கும் ஷபீரின் குடும்பத்தினருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மருமகளை அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து ஷபீரின் குடும்பத்தினர் கீழே தள்ளி விட்டுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அப்பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷபீர் முக்தர் ஷேக் அவரது தாயார், மாமா நூர் முகமது குடும்ப உறுப்பினர்கள் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்