< Back
தேசிய செய்திகள்
2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
15 Sep 2022 8:08 PM GMT

துமகூருவில் 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துமகூரு:

துமகூரு மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொலாலே கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பலதா. இவருக்கு 9 வயதில் ஹேமா மற்றும் 7 வயதில் சேகர் என்ற மகன் இருந்தான். புஷ்பலதாவுக்கும், சாந்தகுமார் என்பவருக்கும் 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். புஷ்பலதாவுடன், அவரது 2 பிள்ளைகளும் வளர்ந்தது.

இந்த நிலையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற புஷ்பலதா கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மகள் ஹேமா, மகன் சேகருடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையே தனது குழந்தைகளுடன் புஷ்பலதா தற்கொலை செய்ய காரணம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் செய்திகள்