< Back
தேசிய செய்திகள்
மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
13 Aug 2023 9:05 PM GMT

விபத்தில் உயிரிழந்த கணவரின் 2-வது நினைவு நாளில் மகனுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:-

தற்கொலை

ஆந்திராவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 35). இவர் தனது கணவருடன் பெங்களூரு சி.கே.பாளையா பகுதியில் வசித்து வந்தார். இந்த தம்பதியின் மகன் ஹரிஹரன் (வயது 7). கடந்த 2 ஆண்டுகளுக்கு விஜயலட்சுமியின் கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் அவர் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் விஜயலட்சுமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் பன்னரகட்டா பகுதியில் உள்ள சகல்வாரா ஏரிக்கு தனது மகனுடன் சென்றார். அப்போது திடீரென அவர் தனது மகனை தனது உடலுடன் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்தாா். அப்போது அந்த பகுதியில் யாரும் இல்லை என்பதால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவரின் நினைவு நாளில்...

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னா் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் ஹரிஹரனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயலட்சுமியின் கணவர் விபத்தில் சிக்கி பலியாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம் அவரது கணவரின் 2-ம் ஆண்டு நினைவு நாளாகும். கணவர் உயிரிழந்ததில் இருந்து விஜயலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால், கணவரின் 2-வது நினைவு நாளில் மகனுடன் ஏரியில் குதித்து விஜயலட்சுமி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சோகம்

இதுதொடர்பாக பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்