< Back
தேசிய செய்திகள்
திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை தாக்கிய இளம்பெண்
தேசிய செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை தாக்கிய இளம்பெண்

தினத்தந்தி
|
20 Aug 2024 4:08 PM GMT

திருமணம் செய்ய மறுத்த காதலனின் அந்தரங்க உறுப்பை இளம்பெண் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது 31 வயது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி பத்மா நகர் பகுதியில் இருக்கும் இளம்பெண்ணின் வீட்டிற்கு அவரது காதலன் சென்றுள்ளார். அப்போது மீண்டும் அந்த பெண் தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதற்கு மீண்டும் அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து தனது காதலனின் அந்தரங்க உறுப்பில் தாக்கியுள்ளார்.

இதில் பலமாக காயமடைந்த அந்த நபர், வலியால் அலறித் துடித்துள்ளார். பின்னர் அவராகவே ஓடி அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இது தொடராக அந்த நபர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்