< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணவர்
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்... வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட கணவர்

தினத்தந்தி
|
1 Sep 2024 1:59 AM GMT

கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பெண்ணின் கணவர் வெளியிட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம், டோம்பிவிலியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அவரது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவியது. இதுபற்றி அறிந்த அந்தப்பெண் பிரிந்து வாழும் தனது கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பெண்ணின் கணவர் வீட்டில் ஸ்பை கேமரா மறைத்து வைத்து உள்ளார். இதனை கவனிக்காத அப்பெண் தனது கள்ளக்காதலனை அடிக்கடி வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

கேமராவில் பதிவான இந்த காட்சியை பெண்ணின் கணவர் சமூகவலைத்தளங்களில் பரப்பி விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அந்தப்பெண்ணின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்