< Back
தேசிய செய்திகள்
குளிர்பதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
தேசிய செய்திகள்

குளிர்பதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

தினத்தந்தி
|
3 July 2022 3:27 PM GMT

சுள்ளியா அருகே குளிர்பதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு;

பாட்டி வீட்டுக்கு...

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கெதம்பாடி அருகே சன்னியாசிகுட்டே கிராமத்தை சேர்ந்தவர் ஹைதர் அலி. இவரது மனைவி அப்சரா. இவர்களது மகன் முகமது ஆதில் (வயது 6).

இந்த நிலையில் முகமது ஆதில் தனது தாய் அப்சராவுடன் சுள்ளியா தாலுகா ஐவர்நாடு அருகே கையதடுக்கா பகுதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்தான். அவன் பாட்டி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.

இந்த நிலையில், முகமது ஆதில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தான். பின்னர் பாட்டி வீட்டில் உள்ள குளிர்பதன பெட்டியை (பிரிட்ஜ்) திறந்துள்ளான்.

மின்சாரம் தாக்கி சாவு

அந்த சமயத்தில், முகமது ஆதில் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஆதில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தாய் மற்றும் பாட்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முகமது ஆதிலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முகமது ஆதில் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை பார்த்து தாய் மற்றும் பாட்டி கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லாரே போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குளிர்பதன ெபட்டியை திறக்கும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்