< Back
தேசிய செய்திகள்
இந்துக்கள் கொலையானபோது சித்தராமையாவின் மனசாட்சி எங்கே போனது?-பா.ஜனதா கேள்வி
தேசிய செய்திகள்

இந்துக்கள் கொலையானபோது சித்தராமையாவின் மனசாட்சி எங்கே போனது?-பா.ஜனதா கேள்வி

தினத்தந்தி
|
10 Jun 2022 10:09 PM GMT

இந்துக்கள் கொலையானபோது சித்தராமையாவின் மனசாட்சி எங்கே போனது? என்று பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் 24 இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். அப்போது சித்தராமையாவின் மனசாட்சி எங்கே போனது?. அப்போது 3 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அவரது மனசாட்சி எங்கே போனது?. சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை அவமதித்தார். சமூகநீதியை பின்பற்றுவதாக அவர் கூறுகிறார்.


ஆனால் அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கல்வி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தினார். முஸ்லிம் அமைப்புகள் மீது இருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

இவ்வாறு பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்