< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு

தினத்தந்தி
|
14 March 2024 12:34 AM GMT

ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

பெங்களூரு,

காங்கிரஸ் பொதுக்கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் டெபாசிட்டாக உள்ளது. இந்த நிதியை பயன்படுத்த முடியாத அளவுக்கு மத்திய அரசு வங்கி கணக்குகளை முடக்கிவிட்டனர். வருமான வரித்துறை அதிக தொகையை அபராதமாக விதித்துள்ளது. அதனால் தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக ஒன்றுபட்டு நின்று காங்கிரசை ஆதரிக்க வேண்டும். தேர்தலில் ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

பா.ஜனதாவிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உள்ளது. திருட்டுத்தனம் வெளியே வந்துவிடும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற அந்த பணம் குறித்த தகவல்களை வழங்க மறுக்கிறது. அவர்களின் தவறுகள் வெளியே வரும் என்பதால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிட வரும் ஜூலை வரை கால அவகாசம் கோருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்