< Back
தேசிய செய்திகள்
தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் - கொடூரத்தின் உச்சம்
தேசிய செய்திகள்

தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் - கொடூரத்தின் உச்சம்

தினத்தந்தி
|
4 July 2023 2:49 PM GMT

பழங்குடியின தொழிலாளி மீது மாற்று சமுகத்தை சேர்ந்த நபர் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த நிலையில் பர்வேஷ் தலைமறைவானார். அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்