< Back
தேசிய செய்திகள்
பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினம்- ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு
தேசிய செய்திகள்

பாகிஸ்தானை போரில் வீழ்த்திய வெற்றி தினம்- ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு

தினத்தந்தி
|
16 Dec 2022 6:05 AM GMT

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

புதுடெல்லி,

1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் (விஜய் திவாஸ்) கொண்டாடப்படுகிறது. இந்த போருக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம், சுதந்திர நாடாக மாறியது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"1971 ஆண்டு போரின் போது நமது ஆயுத படையினர் வெளிப்படுத்திய வீரத்தை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். வீரர்களின் இணையற்ற துணிச்சல் மற்றும் தேசத்துக்காக அவர்கள் செய்த ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்