< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!
|4 Nov 2023 10:48 PM GMT
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் 3.6 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அயோத்தி,
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ரிக்டராக பதிவாகி உள்ளது.
அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அயோத்திக்கு வடக்கே 215 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை.