< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் கனமழை, வெள்ளம்: 9 பேர் பலி
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் கனமழை, வெள்ளம்: 9 பேர் பலி

தினத்தந்தி
|
8 Sep 2024 7:20 PM GMT

உத்தரபிரதேசத்தில் பெய்துவரும் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்தின் பிரதாப்கார், அலிகார், சித்தார்த் நகர், மதுரா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் சாலைபோக்குவரத்து, மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்