< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  மருமகனுக்கு திருமண பரிசாக புல்டோசர் வழங்கிய மாமனார்
தேசிய செய்திகள்

உ.பி.: மருமகனுக்கு திருமண பரிசாக புல்டோசர் வழங்கிய மாமனார்

தினத்தந்தி
|
17 Dec 2022 5:20 PM GMT

உத்தர பிரதேசத்தில் திருமண பரிசாக ஆடம்பர காருக்கு பதிலாக மருமகனுக்கு புல்டோசரை மாமனார் வழங்கி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

ஹமீர்பூர்,


உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடந்து வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களை புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது.

இதனால், உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறி போயுள்ளது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது கூட, இந்த விவகாரம் பற்றிய விவாதம் சூடு கிளப்பியது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் திருமணம் முடிவானது.

யோகேந்திரா, கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவதற்கு பதிலாக, புல்டோசரை வழங்கி உள்ளார்.

இதற்கான காரணம் பற்றி பரசுராம் கூறும்போது, தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், பணம் ஈட்ட இந்த புல்டோசரை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்