< Back
தேசிய செய்திகள்
உ.பி.:  கார் மீது லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

உ.பி.: கார் மீது லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
20 July 2022 4:14 AM GMT

உத்தர பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சாம்பல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து நசுக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.



ரேபரேலி,



உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் படோகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரேபரேலி-பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்ற கரி சாம்பல் ஏற்றிய லாரி ஒன்று காரை முந்தி செல்ல முயன்றுள்ளது.

இதில், திடீரென கார் மீது லாரி கவிழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களது உடல்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் உணவு விடுதி ஒன்றிற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காரில், வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்