< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

தினத்தந்தி
|
31 May 2022 2:59 AM GMT

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் அவந்திபுரா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசார், பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். நேற்று மாலை முதல் இன்று காலை வரை நீடித்த இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட ஷகித் ராதர் மற்றும் உமர் யூசப் ஆகிய 2 பயங்கரவாதிகளிடமிருந்தும் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்