< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர்: 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது
தேசிய செய்திகள்

காஷ்மீர்: 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது

தினத்தந்தி
|
23 Dec 2022 7:49 PM GMT

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெந்திபுரா மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் பெந்திபுராவில் இருந்து ஸ்ரீநகருக்கு செல்ல முயன்ற 2 பயங்கரவாதிகளை அதிரடியாக கைது செய்தனர்.

அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த இமாம் அமின், தமீர் அகமது பட் ஆகிய 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். கைது 2 பயங்கரவாதிகளும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பினர் என்றும் பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி, கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் செய்திகள்