< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி

தினத்தந்தி
|
29 May 2022 12:03 AM GMT

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஷிடிபுரா பகுதியில் பங்கரவாதிகள் பதுங்க் இருப்பதாக போலீசார், பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இஷஃப் அல் கானி மற்றும் யாவர் அயுப் டார் ஆகிய இருவரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்