< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

தினத்தந்தி
|
2 Aug 2023 10:11 PM GMT

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆசாத்கஞ்ச் நகரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால் ராணுவ வீரர்கள் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சுதந்திர தினத்தையொட்டி பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்