< Back
தேசிய செய்திகள்
ஜம்முவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - பொதுமக்கள் 2 பேர் பலி
தேசிய செய்திகள்

ஜம்முவில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - பொதுமக்கள் 2 பேர் பலி

தினத்தந்தி
|
1 Jan 2023 3:49 PM GMT

துப்பாக்கி ஏந்திய பயங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். ரஜோரி மாவட்டம் டங்ரி கிராமத்திற்குள் புகுந்த 2 பயங்கரவாதிகள் அங்கிருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்