< Back
தேசிய செய்திகள்
கொச்சியில் சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

கொச்சியில் சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
26 May 2023 1:04 PM GMT

தீ விபத்தின் போது படகில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சியில் டென்னிஸ் என்பவருக்குச் சொந்தமான 'ஐலண்ட் டி கொச்சி' என்ற சுற்றுலா படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் நடந்த போது படகில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது எப்படி என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்