< Back
தேசிய செய்திகள்
திருப்பதியில் லக்கேஜ்களை தூக்கி வீசும் தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி
தேசிய செய்திகள்

திருப்பதியில் லக்கேஜ்களை தூக்கி வீசும் தேவஸ்தான ஊழியர்கள்- பக்தர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
7 Oct 2022 2:24 PM GMT

விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

திருப்பதி,

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில்பிரம்மோற்சவ நிறைவு பெற்றதால் அனைத்து தரிசனங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் லக்கேஜ்களை தேவஸ்தான ஊழியர்கள் தூக்கி வீசிய நிகழ்வு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வேனில் கொண்டு வரப்பட்ட லக்கேஜ்களை, லக்கேஜ் கவுண்டரில் இறக்கும்போது, அவற்றை வேகமாக தூக்கி எறிவது பதிவாகியிருக்கிறது. இது கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக வந்த தன்னார்வலர்களின் லக்கேஜ்கள் என்று கூறப்படுகிறது. இது பிரம்மோற்சவ விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.

உடைமைகளை தூக்கி எறியும் போக்கை தேவஸ்தான ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களை தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்