< Back
தேசிய செய்திகள்
பண்ட்வாலில் டயர் கடையில் திருட்டு; வாலிபருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

பண்ட்வாலில் டயர் கடையில் திருட்டு; வாலிபருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
13 Oct 2022 7:00 PM GMT

பண்ட்வாலில் டயர் கடையில் திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா மினி விதானசவுதா அலுவலகம் எதிரே அதே பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் கடையை திறந்துேபாட்டு விட்டு வெளியே சென்று இருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் அவரது கடைக்குள் சென்று உள்ளார். இந்த நிலையில் கடையில் ஆட்கள் யாரும் இல்லாததை அறிந்த வாலிபர் கடையின் கல்லாபெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி கொண்டு அங்கிருந்து சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து கடைக்கு வந்த உரிமையாளர் சந்தீப் கல்லாப்பெட்டி திறந்து கிடப்பதையும், அதில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பண்ட்வால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட வாலிபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்