< Back
தேசிய செய்திகள்
காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை
தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
2 Jun 2023 5:17 AM GMT

காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ரஜோரி மாவட்டம் மாவட்டம் டசல் மிஹரி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்