< Back
தேசிய செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 March 2023 6:45 AM GMT

என்.ஆர்.புராவில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கொப்பா சாலையில் ஒருவர் நின்று கஞ்சா விற்பனை செய்வதாக என்.ஆர்.புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பிரகலாத் (வயது 25) என்பதும், அவர் அங்கு நின்று கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்