< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானாவில் போட்டியில்லை - தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் போட்டியில்லை - தெலுங்கு தேசம் கட்சி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 April 2024 8:15 AM GMT

தெலுங்கானாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

ஐதராபாத்,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநகரி கூறியதாவது;

"நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தெலுங்கானாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். வருகிற ஜூன் அல்லது ஜூலையில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தெலுங்கு தேசம் கட்சி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்