< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீர்: பாதுகாப்புப்படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்
|12 Jan 2024 4:21 PM GMT
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ண ஹதி பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் பாதுகாப்புப்படையினரை ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுகொண்டிருந்தது.
கிருஷ்ண ஹதியில் உள்ள வனப்பகுதி அருகே சென்றபோது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரின் வாகனத்தை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.