< Back
தேசிய செய்திகள்
சூடான் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை
தேசிய செய்திகள்

சூடான் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை

தினத்தந்தி
|
21 April 2023 8:45 AM GMT

சூடானில் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சூடானில் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சூடான் நாட்டில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உயர்மட்ட குழு ஆலோசனையில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்