< Back
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முன்கூட்டியே தொடங்கியது தென்மேற்கு பருவமழை

தினத்தந்தி
|
2 July 2024 10:04 AM GMT

தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட முன்கூட்டியே நாடு முழுவதும் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியிருந்த நிலையில், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் இன்று தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் நாடு முழுவதும் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வழக்கமாக 8-ஆம் தேதிதான் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை வழக்கத்தை விட 6 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. முன்னதாக, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மே 30-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

மேலும் செய்திகள்