< Back
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு

தினத்தந்தி
|
24 Jan 2023 9:25 PM GMT

சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. வசதி குறைவாக இருந்தாலும் இங்குதான் தங்குவேன் என அவர் கூறினார்.

கோலார் தங்கவயல்:

சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா தங்குவதற்காக கோலாரில் வாடகை வீடு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. வசதி குறைவாக இருந்தாலும் இங்குதான் தங்குவேன் என அவர் கூறினார்.

சித்தராமையா

கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவர் தொகுதிக்கு வந்து தங்கவும், தொகுதி மக்களை சந்திக்கவும் வாடகைக்கு வீடு தேடப்பட்டு வந்தது.

இறுதியாக கோலார் டவுனில் உள்ள பைபாஸ் சாலை அருகே கோரிலஹள்ளி பகுதியில் ஒரு வாடகை வீடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வாடகையை கட்சி தொண்டர்கள் ஏற்க முடிவு செய்துள்ளனர். முதல் மாடி வசதியுடன் கூடிய இந்த வீட்டை நேற்று சித்தராமையா நேரில் பார்வையிட்டார். பின்னர் இதுபற்றி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வீடு தேர்வு

இந்த வீடு எனக்கு பிடித்திருக்கிறது. வசதி குறைவாக இருந்தாலும், இந்த வீடு எனக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது. இங்குதான் தான் தங்க முடிவு செய்துள்ளேன். கோலார் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் சுலபமாக என்னை வந்து சந்திக்க வசதியாக இந்த வீடு அமைந்திருக்கிறது. அதனால்தான் இந்த வீட்டை தேர்வு செய்துள்ளேன்.

இத்தொகுதியில்நான் வெற்றி பெற்ற பின் கோலார் மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக உருவாக்குவதே எனது கடமை. வளர்ச்சிப் பணிகளில் பின் தங்கிய இந்த மாவட்டத்தை மேம்படச் செய்வதே எனது குறிக்கோள்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்