< Back
தேசிய செய்திகள்
குந்தாப்புராவில்  பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

குந்தாப்புராவில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
1 Sep 2023 6:45 PM GMT

குந்தாப்புராவில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா படுகோனே கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சுனந்தா. இவர்களது மகள் சிந்து (வயது15) இவள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தாள். இதற்காக சிந்து பள்ளியின் விடுதியில் தங்கி இருந்தாள். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிந்து தனது வீட்டிற்கு வந்தாள்.

அவளை பெற்றோர் குந்தாப்புராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மறுநாள் மாணவி பள்ளிக்கு செல்லவில்லை. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

இதுகுறித்து தகவல் அறிந்்த கங்குலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கங்குலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்