< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்கும் திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு
தேசிய செய்திகள்

டெல்லியில் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்கும் திட்டம் - கெஜ்ரிவால் அறிவிப்பு

தினத்தந்தி
|
13 Dec 2022 11:38 AM GMT

மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரும் தரமான கல்வி மற்றும் சுகாதாரத்தை வழங்குவதே ஆம் ஆத்மி அரசின் நோக்கம் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மாநில மக்களுக்கு 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தரமான சிகிச்சைக்கான கட்டணம் அதிகமாக உள்ளதால் சாமானிய மக்களால் மருத்துவ பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், அவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த திட்டம் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்