< Back
தேசிய செய்திகள்
லாரன்ஸ் பிஷ்னோய் தந்தை தாக்கல் செய்த மனு - ஜூலை 11-ல் விசாரணை
தேசிய செய்திகள்

லாரன்ஸ் பிஷ்னோய் தந்தை தாக்கல் செய்த மனு - ஜூலை 11-ல் விசாரணை

தினத்தந்தி
|
27 Jun 2022 10:41 AM GMT

லாரன்ஸ் பிஷ்னோயின் ட்ரான்சிட் ரிமாண்டை எதிர்த்து அவரது தந்தை தாக்கல் செய்த மனு ஜூலை 11ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைசம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக லாரன்ஸ் பிஷ்னோயை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனா்.

லாரன்ஸ் பிஷ்னோய்யை பஞ்சாப்பிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த டெல்லி கோா்ட்டு அனுமதி வழங்கியது. அங்குள்ள மான்சா கோா்ட்டில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்துமாறும் பஞ்சாப் போலீசாருக்கு உத்தரவிட்டனா்.

இதற்கு எதிராக, லாரன்ஸ் பிஷ்னோய்யின் தந்தை டெல்லி ஐகோா்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளாா்.

பஞ்சாபில் உள்ள வழக்கறிஞர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் சாா்பில் ஆஜராகத் தயாராக இல்லை எனவும் இதனால் இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றக்கோாி டெல்லி ஐகோா்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும்ஜேபி பர்திவாலா, "பஞ்சாபில் கொலை நடந்து உள்ளதால் இந்த வழக்கை பஞ்சாப் போலீசார் விசாரித்து வருகின்றனா். இதில் கோா்ட்ட தலையிடுவது சாியாக இருக்காது. என தெரிவித்தனா்.

இந்த கொலை பஞ்சாபின் மான்சாவில் நடந்துள்ளது, எனவே இந்த வழக்கை விசாரிப்பது பஞ்சாப் போலீசாாின் அதிகார வரம்பாகும், எனவே போலீசாா் பிஷ்னோய்யை ரிமாண்டில் அழைத்துச் செல்லலாம் எனவும் சட்டஉதவிகள் தேவைப்பட்டால் பஞ்சாப் மற்றும் அரியானா கோா்ட்டை அணுகலாம் என நீதிபதிகள் தொிவித்தனா்.

இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோயின் தந்தையின் தாக்கல் செய்த மனு வருகிற ஜூலை 11-ந் தேதி கோா்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்