< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.85.24 கோடி: மத்திய அரசு அனுமதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.85.24 கோடி: மத்திய அரசு அனுமதி

தினத்தந்தி
|
26 July 2023 6:49 PM GMT

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.85.24 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி கல்வி அமைச்சகம் பரிசீலிக்கிறதா? அப்படியானால், மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன? என்பது குறித்து மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில், "மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு பள்ளிகளில், முன்மொழிவுகளின் அடிப்படையில் வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் சமக்ரா சிக்ஷா திட்டம் 2018-2019-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி 2023-2024-ம் ஆண்டில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடக்க மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.18 கோடியே 19 லட்சமும், உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.67 கோடியே 5 லட்சமும் என மொத்தம் ரூ.85 கோடியே 24 லட்சம் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்