< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு; குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு
தேசிய செய்திகள்

பஞ்சாப் காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு; குற்றவாளிகளுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு

தினத்தந்தி
|
10 Dec 2022 8:38 AM GMT

பஞ்சாப்பில் காவல் நிலையம் மீது இன்று காலை நடந்த ராக்கெட் குண்டு வீச்சு சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.


தார்ன்தரன்,


பஞ்சாப்பில் தார்ன்தரன் மாவட்டத்தில் சர்ஹாளி காவல் நிலையம் மீது நேற்று நள்ளிரவில் திடீரென ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த தேசிய தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறும்போது, 7 மாதங்களில் 2-வது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.

ஆம் ஆத்மி அரசு அமைந்த பின்னர் பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து டி.ஜி.பி. உள்பட உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைந்தனர். டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நெடுஞ்சாலையில் இருந்து காவல் நிலையம் மீது ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. உபா சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

ராணுவ படையும் விரைந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தடய அறிவியல் அடிப்படையில் விசாரணை நடைபெறும். அதற்கேற்ப மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்பின்னரே என்ன நடந்தது என்ற முடிவுக்கு வரமுடியும். ராக்கெட் லாஞ்சரை பறிமுதல் செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

தொடக்க கட்ட விசாரணை நிறைவில், ராணுவம் சார்ந்த வெடிபொருள் பயன்பாடு தெரிய வந்துள்ளது. எல்லை கடந்த கடத்தல் விவகாரம் என தெரியவருகிறது. அண்டை நாட்டின் திட்டம் என தெளிவாக தெரிகிறது.

200 ஆளில்லா விமானங்கள் இதுவரை எல்லை கடந்து வந்துள்ளன. தாக்குதல் நடத்திய தூண்டியவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர். அவர்களுக்கு ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகளுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களின் தொடர்பு பற்றி விசாரணை நடத்த வேண்டும். அதன்பின்னரே உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்