< Back
தேசிய செய்திகள்
பீகார் சட்டப்பேரவையின் சபாநாயகராக பிகாரி சவுத்ரி தேர்வு
தேசிய செய்திகள்

பீகார் சட்டப்பேரவையின் சபாநாயகராக பிகாரி சவுத்ரி தேர்வு

தினத்தந்தி
|
26 Aug 2022 9:10 AM GMT

பீகார் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக அவாத் பிகாரி சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாட்னா,

பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன், பாஜகவை சேர்ந்த சபாநாயகர் விஜய் குமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் (ஆர்ஜேடி) கூட்டணி அமைக்க, பாஜகவில் இருந்து பிரிந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது. 243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு 164 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்த நிலையில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், பீகார் மாநில சட்டப்பேரவையின் சபாநாயகராக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் அவாத் பிகாரி சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்