< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராமநவமி கொண்டாட்ட வன்முறை: மேற்கு வங்காளத்திடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு
|4 April 2023 9:28 PM GMT
ராமநவமி கொண்டாட்ட வன்முறை தொடர்பாக மேற்கு வங்காளத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
புதுடெல்லி,
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் கடந்த 30-ந் தேதி ராமநவமியை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக 30-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போசிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் பேசி நிலைமையை கேட்டறிந்தார். இந்தநிலையில், ஹவுரா வன்முறை தொடர்பாக மேற்கு வங்காள அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது.