< Back
தேசிய செய்திகள்
ராணுவத்தில் சேர விரும்பினேன்; குடும்ப சூழ்நிலையால் சேர முடியவில்லை - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உருக்கம்!
தேசிய செய்திகள்

ராணுவத்தில் சேர விரும்பினேன்; குடும்ப சூழ்நிலையால் சேர முடியவில்லை - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உருக்கம்!

தினத்தந்தி
|
19 Aug 2022 8:58 AM GMT

ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு பெருமையை அளிக்கிறது என்று அவர் பேசினார்.

இம்பால்,

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்று இருந்தார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இந்திய ராணுவம் நிகழ்ச்சியில் மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

எனது சிறுவயது கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். அதற்காக எழுத்துத் தேர்வு எழுதினேன். ஆனால், எனது தந்தையின் மரணம் உட்பட எனது குடும்பத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

ராணுவ சீருடையை குழந்தைக்கு கொடுத்தால், அவனது குணம் மாறுகிறது. இந்த சீருடையில் ஒரு பெரிய கவர்ச்சி இருக்கிறது.

இந்தியா-சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போது, உங்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கும் அன்றைய ராணுவ தளபதிக்கும் தெரியும். நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் தெரியும். நாடு எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும்.

நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திப்பதை உறுதி செய்து கொள்கிறேன். எனது மணிப்பூர் பயணம் திட்டமிடப்பட்டபோது, நான் (இராணுவத் தளபதி) பாண்டே-ஜியிடம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57வது மலைப்பிரிவின் துருப்புக்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கேட்டிருந்தேன்.

ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு ஒரு பெருமையை அளிக்கிறது.டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் பட்டயக் கணக்காளர்கள் ஏதோ ஒரு வகையில் தேசத்திற்குப் பங்காற்றுகிறார்கள் என்றாலும், உங்கள் தொழில் ஒரு தொழிலை விட மேலானது மற்றும் ஒரு சேவையை விட மேலானது என்று நான் நம்புகிறேன்.

அசாம் ரைபிள்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது, அவர்கள் வடகிழக்கின் காவலாளி என்றழைக்கப்படுவது சரியானதாக இருக்கும்.

இவ்வாறு பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்