< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசம்: மாயாவதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசம்: மாயாவதி

தினத்தந்தி
|
30 Oct 2022 7:18 PM GMT

குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசமாக உள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பொது சிவில் சட்டத்தை ஒரு தேர்தல் பிரச்சினையாக பா.ஜனதா ஆக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு பதிலாக, சர்ச்சைக்குரிய, பிரித்தாளும் பிரச்சினைகளை தேர்தல் பிரச்சினை ஆக்குகிறது.

இது, குஜராத்தில் பா.ஜனதா நிலைமை மோசம் என்ற வாதத்துக்கு வலு சேர்க்கிறது. பொது சிவில் சட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறிய நிலையில், பா.ஜனதா இப்படி செய்யக்கூடாது. மேலும், குஜராத், இமாசலபிரதேசம் சட்டசபை தேர்தல்கள் நடக்கும் நிலையில், ரூ.545 கோடி மதிப்புள்ள நன்கொடை, பெயர் தெரியாதவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் எங்கே போகிறது?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்