< Back
தேசிய செய்திகள்
ரெயில் டிக்கெட் முன்பதிவு - ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ரெயில் டிக்கெட் முன்பதிவு - ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டம்

தினத்தந்தி
|
18 Aug 2022 12:54 PM GMT

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

புதுடெல்லி,

ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும்போது 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு ஈடான கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் பரவியது. இதையடுத்து ரெயிலில் பயணிக்கும் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ரெயில்வே அமைச்சகத்தின் 2020 தேதியிட்ட சுற்றறிக்கையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வழங்கப்படமாட்டாது. இருப்பினும் 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி பெர்த் அல்லது இருக்கை வேண்டும் என்றால் அதற்காக முழு தொகையை செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரெயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்