< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரை - மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரை - மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
31 Aug 2022 10:54 AM GMT

ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

'இந்தியா அனைவருக்குமான நாடு' என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையை தொடங்குகிறார்.

150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ந் தேதி நடக்கிறது.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கான ஏற்பாடுகளை கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்