< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தியின் பாதயாத்திரை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை பங்கேற்பு
தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் பாதயாத்திரை; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை பங்கேற்பு

தினத்தந்தி
|
9 Nov 2022 7:32 AM GMT

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை இணைந்து கொள்வார் என மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.



ஐதராபாத்,


அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை (பாரத் ஜோடோ) நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது நடைபயணம் கேரளா, ஆந்திரா வழியாக தெலுங்கானா சென்றடைந்தது.

இந்த நிலையில் ராகுல்காந்தி நடைபயணம் மராட்டியத்திற்குள் நேற்று முன்தினம் இரவில் நுழைந்தது. நாந்தெட் மாவட்டம் தெக்லூரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையை அடைந்த அவரது நடைபயணத்துக்கு மராட்டிய காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே, முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் ஆகியோர் முன்னிலையில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நிருபர்களை இன்று சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை இணைந்து கொள்வார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே ஆகியோர் வருகிற 11-ந்தேதி இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள். இதேபோன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் பாதயாத்திரையில் நாளை கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்