< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு நாளை திருமணம்: டாக்டர் பெண்ணை மணக்கிறார்...!
தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல்-மந்திரிக்கு நாளை திருமணம்: டாக்டர் பெண்ணை மணக்கிறார்...!

தினத்தந்தி
|
6 July 2022 11:11 AM GMT

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.

சண்டிகர்,

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஞ்சாபில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து பகவந்த் சிங் மான் அம்மாநிலத்தின் 17வது முதல்-மந்திரியாக கடந்த மார்ச் 16ந்தேதி பதவி ஏற்றார். பஞ்சாப் முதல்-மந்திரியாக பகவந்த் மான் பதவியேற்ற நிகழ்ச்சியில், அவரது குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

சண்டிகரில் எளிய முறையில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, டெல்லி மற்றும் பஞ்சாப் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். மேலும், பகவந்த் மானின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள பகவந்த் சிங் மானின் இரண்டு குழந்தைகளும் தனது தந்தையின் இரண்டாவது திருமணத்தைக்காண சண்டிகர் வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்