< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் வாலிபரை தாக்கி பணம் பறித்த போலீஸ் எஸ்.ஐ. உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
|26 July 2023 10:25 PM GMT
பணம் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஷாஜகான்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் நந்த் குமார். தலித் இனத்தை சேர்ந்த இவர் அங்கு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நந்த் குமார் தனது கடையில் இருந்தபோது அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மீனா உள்ளிட்ட 3 போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி நந்த் குமாரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் 3 பேரும் நந்த் குமாரை சரமாரியாக அடித்து, உதைத்ததுடன் அவர் வைத்திருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்து கொண்டு அவரை விரட்டிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து நந்த் குமாரின் குடும்பத்தினர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் துணை சூப்பிரண்டு போலீஸ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.