< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார் - பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

"நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்" - பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

தினத்தந்தி
|
6 Nov 2022 8:09 PM GMT

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பிரதமர் மோடி பலவீனப்படுத்துவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, இமாசலபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்தார். சோலன் என்ற இடத்தில் அவர் பேசியபோது வாக்காளர்களிடம், " நீங்கள் தாமரையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நான் தாமரையுடன் உங்களிடம் வந்துள்ளேன். நீங்கள் வாக்களிக்க செல்கிறபோது, தாமரையை பாருங்கள். பா.ஜ.க.வும், மோடியும் உங்களிடம் வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தாமரைக்கு போடுகிற ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கான உங்கள் ஆசியாக அமையும்" என குறிப்பிட்டார். ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

தொகுதியில் போட்டியிடுகிற வேட்பாளரின் பெயரை வாக்காளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மரியாதைக்குரிய பிரதமர் கூறி இருக்கிறார். மேலும், தாமரைக்கு வாக்கு அளியுங்கள். அது மோடிக்கான உங்கள் வாக்கு என்றும் சொல்லி உள்ளார்.

நாடாளுமன்ற விவாதங்களையும், பத்திரிகையாளர்கள் சந்திப்புகளையும் தவிர்த்து விட்டு, பிரதமர் மோடி, இப்போது தொகுதி அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே பலவீனப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் பக்தர்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையை நீண்டகாலமாகவே வளர்த்து வருவதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஜனாதிபதி ஆட்சி முறை என்பது, பெரும்பான்மைவாதத்தை நிலைநிறுத்தும். ஆனால் நாட்டின் பன்முகத்தன்மையை சாகடித்து விடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்