தேசிய செய்திகள்
பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி உழைக்கிறார் - ராஜஸ்தான் முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

'பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி உழைக்கிறார்' - ராஜஸ்தான் முதல்-மந்திரி

தினத்தந்தி
|
16 Jun 2024 12:55 PM GMT

பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி உழைக்கிறார் என ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பேவார் பகுதியில் பெண்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையத்தை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"பெண்கள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி உழைக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்காக அமல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள், நமது நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்ட விதம் மற்றும் உலக அளவில் நமது நாட்டிற்கு கிடைத்திருக்கும் பெருமை ஆகியவற்றை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்."

இவ்வாறு பஜன்லால் சர்மா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்